*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Tuesday, September 19, 2006

ராஜநாகம் வந்தது - ராசமணி-8

அப்பன் காலத்துக்குப் பிறகு எனக்கும் பனையேத்து தொழிலாச்சு. கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ள பெத்த பிறகும் எனக்குள்ள ஒரு ஏக்கம் இருந்தது. அண்ணு கிட்டின நிதி இருந்திருந்தா இப்பிடி நிதம் பனையேறி கஷ்டப் படணுமான்னு அப்பப்ப நெனச்சுக்குவேன்.

இப்படி காலம் போய்க்கிட்டு இருக்கைல எப்போதும் போல ஒரு நாள் விடியக்காலத்த எழுச்சி பனையேறப் போனேன். பனைக்க மேலயிருந்து பார்க்க செவப்பா தரையில ஏதோ மினுங்கிச்சு. நல்லா உத்துப் பார்த்தேன். சின்ன சிவப்பு பல்பு எரிஞ்சது போல வெளிச்சம். அது என்னன்னு பார்க்க வேகமா கீழ இறங்கி வந்தேன். வந்து பாத்தா ஒண்ணையும் காணல்ல. நல்லாத் தேடிப் பாத்துட்டு மறுபடி பனைக்க மேல ஏறிப் பார்த்தேன். அப்பவும் ஒண்ணும் காண முடியல.

ஏதோ ஒரு சந்தேகத்துல மறுநாளும் நேரமே எழுந்து போனேன். அண்ணும் ஒண்ணும் காணல. பிறகு தினமும் பனைல ஏறி நல்லா தேடுவேன். சரியா இருபத்தொம்பது நாள் கழிச்சி மறுபடி அதப் பார்த்தேன். மேலயிருந்து அதப் பார்த்தவுடனே அது என்ன்னு எனக்கு மனசிலாகிப் போச்சு. அண்ணைக்கு கறுத்த வாவு. போனமாசம் கறுத்த வாவு அண்ணைக்கு தான் முதல்ல அதைப் பார்த்தது. பிறகு மறுபடி அடுத்த அமாவாசைக்குத்தான் பாக்குறன். அப்படிண்ணா அது அதுதான்..."

பனையேறி கதையை நிறுத்தி விட்டு எழுந்து சிறுநீர் கழிக்க போனார். அவர் வரும் வரை இளவட்டங்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர்களும் பின்னோடு போயினர். 'அது' என்ன வென்று அறியும் ஆவலில்.

'வேலை' முடிந்ததும் பனையேறி கதையைத் தொடர்ந்தார். "நான் களரி படிக்கப்போன காலத்துல கோபாலன் ஆசான் ஒருமுறை ராசசர்ப்பத்துக்க கதைய சொன்னார். ஆயிரம் வெளுத்த வாவுக்காலம் மனுச கண்ணுல படாத வளர்ந்த நாகப்பாப்பு சக்கரவர்த்தி சர்ப்பமா மாறும். அதாவது கிட்டத்தட்ட நூறு வருசம். அப்ப அது நிலாவுக்க சக்திய கிரகிச்சு மணியாக்கி எடுக்கும். அது சிப்பிக்குள்ள முத்துப்போல ராசசர்ப்பத்துக்க தொண்டைக்குழியில வளரும். பின்னையும் தொண்ணூற்றொன்பது பௌர்ணமி கழித்து பூரண நாகமணி விளையும். அத முத முதலா ஒரு நெறஞ்ச அமாவாசை அண்ணைக்கு கக்கும். அதப் பார்த்த வெளிச்சத்துல அதுக்க கண்ணு அவிஞ்சு போகும். ஆனாலும் ஒரு புதிய சக்தி அதுக்க ஒடம்புல ஏறும்.

அதுக்கு பிறகு சாதாரண வெளிச்சத்துல அதுக்கு கண்ணு தெரியாது. குருடா இருக்கும். ஆனா நாகமணிக்க வெளிச்சத்துல அதுக்கு கண்ணு காணும்.

அது இரை தேடி பகல் வெளிச்சத்துல வரமுடியாது. ஒவ்வொரு அமாவாசைக்கும் அது வெளிய வந்து நாகமணிய கக்கி ஒரிடத்தில் வச்சுட்டு அந்த வெளிச்சத்துல இதை தேடும். இரை கிடைத்த பிறகு நாகமணிய எடுத்து விழுங்கிட்டு புத்துக்குள்ள போயிடும். அடுத்த அமாவாசை வரை அது மறுபடி வெளியே வராது.

நாகமணி இல்லேண்ணா அதால இரை தேட முடியாது. ஆனால் அந்த நாகத்து கிட்ட யாரும் போக முடியாது. அது சீறி மூச்சு விட்டாலே அந்த மூச்சுக்காத்துல வாற விஷம் போதும் மனுசன சவமாக்கறதுக்கு.

இவ்வளவு விவரங்களும் ஆசான் சொல்லி நான் அறிஞ்சது. அதனால் இது நாகமணி தான்னு உறுதியா தெரிஞ்சது. இனி என்ன செய்யலாம்னு யோசிச்சு பாத்தேன்.

ஒரு முடிவோட ஒருமாசம் காத்திருந்தேன். அடுத்த அமாவாசையும் வந்தது.

(கதை வளரும்...)

6 comments:

முகில் said...

today only I saw this. have read all the previous ones in one go.

since I like stories of this type it is very interesting.

please continue. (sorry for the english)

வலைஞன் said...

நன்றி முகில்.

வாசிக்க விரும்பும் உங்களுக்காக தொடர்வேன்...

Anonymous said...

I also saw this only today

Anonymous said...

Thiru. வலைஞன்,
I am an avid reader of Indira Soundarajan and Ki.Rajanarayanan. Your writings resemble them both. I enjoy your writings. Since I dont have a blogger account and I do not have the facility to write in Tamil, I am writing in English. Sorry for that.

When u said u are stopping the story for want of feedback, i felt compelled to write.

Please continue your good work.
Looking forward to read the story.

With respect and regards,

munna

Hariharan # 03985177737685368452 said...

வயசான நாகப்பாம்பு மாணிக்கத்தைக் கக்கும்னு சின்னப்பயலா இருந்தப்பக் காதுவாக்கில கேட்டிருக்கேன்.

உங்க தொடர் 7 & 8 படிச்சேன். அடுத்ததற்கு ஆவலாய் இருக்கிறேன் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு.

அன்புடன்,

ஹரிஹரன்

முகில் said...

நன்றி வலைஞன்.

*